03/17/2011

NEXT POST
மெளன கோபுரம் Tower of Silence: பார்ஸி இனத்தவர்கள் இறந்தவர்களைப் பிரியும் இடம். வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாகவமாக மொட்டை சுவற்றில் வந்து உட்கார்ந்த கழுகு, தரையிலிருந்து பார்க்க சின்ன குருவிபோல இருந்தது. தன் கூட்டத்துடன் உட்கார்ந்ததில் ராஜாக்களின் கம்பீரம் தோற்றது. சார்வர் இதே மொட்டை சுவற்றை கடந்த ஒரு வருடமாக பார்த்து வருகிறார்.கழுகுகள் முன்னிருந்தது போல் இப்போதெல்லாம் வருவதில்லை. பலாஷிடம் கேட்டுப் பார்த்தார். ’நானும் கொஞ்ச காலமாய் பார்த்துவருகிறேன், குறைவாகத் தான் இருக்கின்றன’ . பலாஷ் சார்வரின் டாக்டர். ‘உங்களுக்கென்ன வயதாகவில்லையே’ - சம்பந்தமேயில்லாமல் ஜோக்கடித்தார். டாக்டரைத் தொடர்ந்து தன் வீட்டருகே இருந்த டெய்லர், பாபுபாய், அவுனிகா, ஏன் தன் கடைசி பேரன் மோட்டுவிடம் கூட கேட்டுப்பார்த்தார். யாருக்குமே தெரியவில்லை. ஆனால், யாருக்கு என்ன அக்கறை. எல்லோரும் சின்ன வயதுக்காரர்கள். தன் வயதை ஒத்தவர்களிடம் சரியான பதில் கிடைக்கலாமென, மோட்டுவின் ஸ்கூல் அருகே இருந்த பூங்காவுக்குள் நுழைந்தார். தன் பிறப்பின் அர்த்தமே...
PREVIOUS POST
மயில்கழுத்து கதையை முன்வைத்து நண்பர் நட்பாஸும் நானும் சில சிறுகதைகள் பற்றி மடல் மூலம் பகிர்ந்துகொண்டோம். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு திரும்பியபோது அவர் பல அப்சர்வேஷன்களைப் பகிர்ந்து கொண்டார். நண்பர் நட்பாஸின் ஆர்வம் இலக்கியத்தைத் தாண்டி உளவியல், அறிவியல், உலக அரசியல் என எல்லையில்லாமல் நீளும். அவரது சம்மதத்துடன் சிறுகதைகள் பற்றியும் ஜெயமோகன் எழுதிய ’மயில்கழுத்து’ பற்றியும் ஓரிரு எண்ணங்கள். * மயில்கழுத்தில் பாத்திரங்களின் குணாதிசயங்கள், பின் - முன் உட்கதைகள் வரிசையாக வருவதில்லை. ஒரு ப்ளாட்டிங் பேப்பரில் பல இடங்களில் தொடப்படும் மை மெல்ல ஊறி எல்லா இடங்களையும் இணைப்பது போல், கதை/உட்கதை ஆங்காங்கே விவரிக்கப்பட்டு நம்முன் ஒரு நிகழ்வாக விரிகிறது. ஒரே காலத்தில் நடக்கும் கதையானாலும், இக்கதைக்குள்ளும் ஃபிளாஷ் பேக் எல்லாம் இருப்பதால் முன் - பின் நகரும் படம் போல் கதை பல இடைவெளிகளை நிரப்பியபடி முடிவை நோக்கிப் போகிறது. ஒரேடியாக வரிசைக்கிரமமாகக் கதையைச் சொல்லாமல் இப்படிச்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments