வம்சி பதிப்பகத்தினர் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் இங்கே. போன வருடம் நான் எழுதிய 'இரைச்சலற்ற வீடு' கதை ரெண்டாம் பரிசு பெற்றுள்ளதை மிக்க மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். முதல் முறையாக நான் எழுதுவது அச்சில் வெளியாகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். நடுவர்களுக்கும் (எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி) வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து நான் எழுதும் அனைத்துக்கும் கறாரான விமர்சனங்களை அளித்து வரும் நண்பர் நட்பாஸ் அவர்களுக்கும் இந்தக் கதையில் இருந்த எழுத்துப்பிழைகளை சுட்டிக் காட்டிய நண்பர்கள் ஆர்.கோபி, கபீஷ் இருவருக்கும் பலப் பல நன்றிகள்.
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



அருமையான புத்தாண்டு செய்தி!
வாழ்த்துகள்.
Posted by: Kalimankalayam | 12/31/2011 at 11:25 PM
பாராட்டுகள் கிரி.
நல்ல கதையென்று எனக்குப் படிக்கும்போதே தோன்றியது.
Posted by: கோபி ராமமூர்த்தி | 01/01/2012 at 06:53 AM
வாழ்த்துகள் கிரி:)
கோபி அப்போவே சொன்னார் அதான் எழுத்துப் பிழைகளிலும் திருத்தம் சொன்னார்.
Posted by: kabheesh | 01/01/2012 at 09:34 PM
நன்றி நட்பாஸ், கோபி, கபீஷ் :)
Posted by: கிரி | 01/01/2012 at 09:43 PM