Twitter Updates

    follow me on Twitter
    Related Posts with Thumbnails

    « நல்லது கெட்டது | Main | நாவல் - செளரிங்கி - பின்காலனிய கல்கத்தாவின் கதை. »

    10/11/2011

    TrackBack

    TrackBack URL for this entry:
    http://www.typepad.com/services/trackback/6a01156ffbfe0a970b015392394d54970b

    Listed below are links to weblogs that reference நித்ய கன்னி - கனவின் பயணம்.:

    Comments

    Feed You can follow this conversation by subscribing to the comment feed for this post.

    அருமையான பதிவு. சமூக வரலாற்று பார்வை இல்லாததால் மித்திலன் இதை எழுதத் தவறி விட்டார் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல, நித்ய கன்னியின் ஆதார ஸ்ருதியையே அவர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் macrocosmic levelல் பார்த்ததை அவர் microcosmic levelல் பார்த்திருக்க வாய்ப்பிருந்தும் அதைத் தவற விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. இந்த மாதிரி பார்த்திருந்தால் இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்து ஒரு முழுமையான வாசிப்பு கிடைத்திருக்கும். :(

    இந்தக் கதையின் துவக்கத்தில், மாதவி காலவனைப் பார்க்கிறாள், அவளது புலன்கள் அவனைத் தொட முனைகின்றன- எம்விவி எவ்வளவு அழகாக எழுதுகிறார் பாருங்கள்:

    "இமையா நாட்டத்தினால் நெஞ்சம் அமைதி இழப்பதை உணர்ந்தாள் மாதவி. "யாரென விளங்காத ஒரு புது ஆடவனைப் பார்ப்பது பிசகு" என அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். திக்குத் தெரியாத வெளியில் பாய்ச்சல் போடும் மனமானை வசப்படுத்த விரும்பி, அந்த மனிதன் மீதிருந்த விழிகளை வாங்கித் திரும்பினாள். ஆயினும், புற ஒலி நின்ற பிறகும் மனதிற்கு கேட்கும் மணி ஓசை போன்று, அவனுடைய தோற்றம் அவளுடைய உடலின் நரம்பு ஒவ்வொன்றிலும் ரீங்காரம் செய்தது. வண்டு முரலுவதைக் கேட்டு காற்றில் நடமிடும் ரோஜாச் செடியினதைப் போன்ற ஓர் உணர்ச்சி அவளுக்குள் எழுந்தது. "ஏதாவது செய்ய வேண்டும்," என்னும் ஒரு குறுகுறுப்பு உண்டாயிற்று அவளுக்கு.

    "எதிரில் நின்ற மான்குட்டியின் மருங்கில் சென்று, அதனுடைய கழுத்தைத் தடவிக் கொண்டாள். ஐம்புலன்களும் அந்தப் புதியவனை - அவளுக்குப் புதுமையானவனாய்த் தோன்றினான் அவன் - நாடி ஓடுவதை வேறு பக்கம் திருப்பிவிட எத்தனித்த அவள், அந்த மான்கன்றின் முகத்தைப் பலமுறை முத்தமிட்டாள்"

    கட்டுரையில் மாதவிக்கு passive role இருப்பதாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டிருஆக்கிறது, இது ஒரு பெரும் பிழை, பாவம், அவர் இதை ஒரு ஆண்மைய பிரதியாக மட்டும் வாசித்திருக்கிறார் போல. உண்மையில் இந்த நாவல் ஆண் பெண் உறவைப் பற்றி முழுமையாகப் பேசுகிறது. அழகு புலன் நாட்டத்தில் தன் மனதை செலுத்துகிறது, அதன் விளைவுகள் என்ன, அதிலிருந்து மீட்சி எப்படி என்பன நம்முன் நிற்கும் கேள்விகள்.

    தொடர்ந்து எழுதுகிறார் எம்விவி,

    "இந்த இளமானின் சருமம் போல்தானே அவனுடைய வதனமும் மிருதுவாக இருக்கும்?"

    இங்கு அந்த மான் புலன்கள் நிறைவு காணும் இடமாக இருக்கிறது. மானின் பெயர் கல்யாணி.

    மாதவியை குதிரை பேரம் செய்வது என்று முடிவாகி, காலவன் அவளைத் தேரில் அழைத்துச் செல்கிறான். அவர்களைத் தொடர்ந்தோடி வந்த கல்யாணி அப்போது காட்டில் ஒரு இடத்தில் அவர்களுடைய தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு செத்து விடுகிறது. நெருப்பு மூட்டி அதற்கு காரியம் செய்கிறாள் மாதவி, "என் கல்யாணி சாம்பலாகி விட்டாள்," என்கிறாள் அவள்.

    "பெண்ணின் கல்யாணியே மறைந்துவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது," என்கிறார் எம்விவி.

    மாதவியின் புலன் நாட்டம் மரணமடையத் தொடங்குகிற இடம் இது என்று நினைக்கிறேன்.

    அப்புறம் இன்னொரு கல்யாணி வருகிறாள்.

    மாதவி கற்பில்லாதவள் என்று விசுவாமித்திரரைச் சுற்றி உள்ள ரிஷி பத்தினிகளால் அவமானப்படுத்தப்பட்டு, மனமுடைந்து சுரம் மிகுந்து மூர்ச்சையடைகிறாள். அப்போது அவளைத் தெளிவிக்க காலவன் ஒரு சிறுமியை அழைத்து வருகிறான். அவள் பெயர் கல்யாணி.

    "அந்த விலங்கின் மருட்சி நிறைந்த விழிகளுக்கும் அச்சிறுமியின் விழிகளுக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாக அவள் (மாதவி) கற்பனை செய்தாள். சூதுவாது அறியாத இச்சிறுமிக்கு எதிர்காலம் எவ்வளவு இன்னல்களை மூடி வைத்துள்ளதோ?" என்று நினைக்கிறாள் மாதவி.

    இங்கு சுத்திகரிக்கப்பட்ட புலனின் அன்பு நிலை உணர்த்தப்படுகிறது என்று நினைக்கிறேன். "அவள் காலவனைக் கண்டது எந்தக் கெட்ட வேளையோ, தெரியவில்லை; அப்போதிலிருந்து அவளுக்கு அமைதி இல்லை," என்று தொடர்கின்றன மாதவியின் நினைவுகள்.

    கதையின் இறுதியில், மனம் பேதலித்த நிலையில் ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த மாதவி, எழில் பித்தன் உசீநரனின் மரணத்தைத் தொடர்ந்து காட்டுக்குள் ஓடுகிறாள்-

    "மரம், செடி, கொடிகளை எல்லாம் தாண்டி, வேடுவனால் துரத்தப்படும் மானைப் போல், தரையில் கால் பாவாமல் ஓடிக் கொண்டிருந்தாள் அவள்; அவளுடைய கூச்சசலாலும் காலவனுடைய குரலாலும் பீதி கொண்டு மருண்ட மான்கள் அவளுக்குப் பின்னால் பாய்ந்து ஓடத் துவங்கின"

    காலவன் அவளைத் துரத்திக் கொண்டு ஓடி மயங்கி விழுகிறான். கதை இப்படி முடிகிறது-

    "பிரக்ஞை பெற்று அவன் எழுந்தபோது, அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன; குரல் ஒலியும் எதிரொலியும் அடங்கி விட்டன. காட்டுக்குள் சென்ற மாதவியின் சுவடே புரியவில்லை...

    "தரையில் விழுந்து, தலையில் அடித்துக் கொண்டு, சிறு குழந்தை போல், தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான் காலவன்."

    எப்படி இருக்கு கதை?

    காவலன்தான் காலவன் என்று நினைக்கிறேன். மாதவி ஒரு free spirit. புலன் நாட்டம் சிறையாகிறது; பின், அது இறந்து, சூதுவாதறியா குழந்தைமையில் திரும்ப அறியப்படுகிறது- முடிவில், இருமைகள் நிறைந்த உலகில் புலன்கள் நிறைவு காண முடியாமல் "மான்களோடு மானாக" காட்டில் ஒருமையடைகின்றன.

    ஓஷோ போன்றவர்கள் புலன்களை வெற்றி கொள்வது எப்படி என்ன என்பது பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தால், நித்ய கன்னிமை எப்படி அடையப்படுகிறது, அந்த பேராற்றல் சாபமாக இல்லாமல் எப்போது வரமாக மனிதர்களால் உணரப்படுகிறது என்பனவற்றையும் இந்தக் கதை பேசுகிறது என்று சொல்ல வழியிருக்கிறது, இல்லையா?

    "தொழில் நுணுக்கம், வானவெளி வெற்றி எல்லாம் கைகூடி வரும் இந்தக் காலத்திலும் இன்னும் அந்தப் பழைய வெற்றி கிட்டிய பாடில்லை; அதுதான் உள் வான வெற்றி. அதை ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே செய்துதான் ஆக வேண்டும்," என்று எழுதுகிறார் தி ஜானகிராமன் தன் முன்னுரையில்.

    நடைமுறை வாழ்வில் பெண்ணின் அழகு அவளை வெவ்வேறு வகைகளில் அடிமைப்படுத்துவதாகவே இருக்கிறது. புலன்களின் விழைவுக்கு நிறைவு கண்டு இன்புறுவதாக பெரும்பாலான பெண்களின் இல்லற வாழ்வு துவங்குகிறது; காலப்போக்கில் அது திரும்பத் திரும்ப அடி வாங்கி, முடிவில் அவளது தூய அன்பு மட்டுமே எஞ்சி நிற்கிறது- அவளது புலனுலகம் மரித்து மறைகிறது. இழப்பு பெண்ணுக்கு மட்டுமல்ல, ஒரு உயர்ந்த வாழ்வுக்கான சாத்தியங்களை இழக்கும் ஆணுக்கும்தான்.

    புலன்களின் சுத்திகரிப்பைத் தன்னில் ஒவ்வொரு ஆணும் நிகழ்த்திக் கொள்வதே இந்த சிக்கலுக்குத் தீர்வாக இருக்க முடியும் (உசீனரனின் எழில் பார்வை போல). அவனைப் பிரியும்போது மட்டுமே மாதவியின் மனம் சஞ்சலப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

    ஒரு நல்ல படைப்பு தீர்வுகளைத் தருவதாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதற்கில்லை- அறச் சிக்கலில் வாசகனை ஆழ்த்தி அதற்கு விடை தேடும் உந்துதல் தருவதாக அது இருக்கிறது என்றால் அந்த அளவில் அது வெற்றி பெற்ற படைப்புதான் என்று சொல்ல வேண்டும்.

    ஆண்-பெண் உறவு, உரிமை-விடுதலை என்று பல ஆதார சிக்கல்களைப் பேசும் நித்ய கன்னி நம்மை இந்த திசையில் பற்பல தீர்வுகளை சிந்திக்கச் சொல்லி நிர்பந்திக்கிறது- ஏதோ கதைதான் என்று விட்டுவிட்டுப் போக முடிவதில்லை, இதற்கு என்ன பொருள், என்னதான் முடிவு என்ற கேள்விகளை நம்முன் மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இதுவே நித்யகன்னியின் வெற்றி என்று நினைக்கிறேன்.

    அருமையான நாவல், அது எழுப்பும் அடிப்படை கேள்விகளை சமூக, வரலாற்று பார்வையுடன் சிறப்பாக அணுகியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    Verify your Comment

    Previewing your Comment

    This is only a preview. Your comment has not yet been posted.

    Working...
    Your comment could not be posted. Error type:
    Your comment has been posted. Post another comment

    The letters and numbers you entered did not match the image. Please try again.

    As a final step before posting your comment, enter the letters and numbers you see in the image below. This prevents automated programs from posting comments.

    Having trouble reading this image? View an alternate.

    Working...

    Post a comment