Twitter Updates

    follow me on Twitter
    Related Posts with Thumbnails

    « How to name It - இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப் புரட்சி | Main | கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் மற்றும் லினக்ஸ் »

    12/30/2009

    TrackBack

    TrackBack URL for this entry:
    http://www.typepad.com/services/trackback/6a01156ffbfe0a970b0120a78d7f5f970b

    Listed below are links to weblogs that reference 2010 - அடுத்த வருடம் என்ன செய்யலாம் ?:

    Comments

    Feed You can follow this conversation by subscribing to the comment feed for this post.

    //மிக எளிமையான எண்ணங்களைக் கூட சரிவர எழுத்தில் கொண்டு வர முடியாதது தான். நாம் சொல்ல நினைப்பது, படிப்பவர்களுக்கு உடனடியாகப் போய் சேர்வது நெம்ப கடினம். கட்டுரைகள் எழுதும் போது பல முறை படித்து திருத்தம் செய்தாலும், சுலபமான வாக்கிய பிரயோகங்கள் கூட அடிசெருக்கும். நகைச்சுவையாக எழுதுவது, வீரியமான வாக்கியங்கள், கூர்மையான மொழிநடை கொண்ட கட்டுரைகளை உருவாக்க என் மொழி அறிவு பத்தாது //

    எனக்குள்ளும் எழுந்த இந்த உணர்வுகள் சரிதான்! என்ற முடிவுக்கு வரவும் இந்த வரிகள் உபயோகமாக இருந்தது ! :)

    கிரிதரன்!
    //லாவகமாக// லாகவகமாக! (இலகு --> லாகவம்! நன்றி: ரவிசங்கர்)
    மற்றபடி உங்கள் எழுத்தை நான் இந்த ஆண்டு அவ்வப்போது வாசித்திருக்கிறேன்.(வார்த்தை, வலைப்பதிவு, சொல்வனம்,...) ஒரு சுவாரசியமான, அதே சமயம் விஷயச்செறிவுள்ள நடை என்றே சொல்வேன். (நீங்கள் உதாரணம் காட்டிய சொக்கனை விடவும்! தேசிகன் கிட்டத்தட்ட அருகில் வந்தார்! குறிப்பாக உங்கள் இசைக் கட்டுரைகள் அற்புதம்! பாஸ்டன் பாலா கூட ஒருமுறை ஏதோ சங்கிலித்தொடர் பதிவுகளுக்கு உங்களை அழைத்த ஞாபகம்!)

    ஜெமோவிடம் ஏதோ ஒரு கடிதத்தில் சுவாரசியமான எழுத்தாக இருந்தால் உபயோகமாயில்லையே (& vice-versa) என்று கேட்கப்பட்டதற்கு, உண்மையான அறிவாளிகள் (ஒரு விஷயத்தை ஆழ்ந்து படித்தவர்கள்), அதை சுவாரசியாமாக எழுதுவதுதான் இந்த சிக்கல் தீர ஒரே வழி என்றார்! எனக்கு தங்கள் ஞாபகம்தான் வந்தது!
    நிச்சயம் தொடர்ந்து எழுதுங்கள்.
    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    //லாகவம்// - நன்றி. தப்பாகச் சொல்லிச் சொல்லி அதே நிலைத்து விட்டது.

    இசைக் கட்டுரைகளை ரசித்துப் படிப்பதற்கு நன்றிகள். சிக்கல் தீர, தொடர்ந்து எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்.

    நன்றி
    ரா.கிரிதரன்

    'How to name it-இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி'-ஐ சொல்வனத்தில் வாசித்தேன். கருத்தும்,எழுத்துநடையும் நன்றாயுள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்.

    ஆதிரை, நல்ல பெயர்.

    அன்புள்ள ரா.கிரிதரன்,

    மொழியை கையாளும் விதத்தில் நான் இயங்கும் முறை குறித்து எனக்கே பலத்த அதிருப்தி உண்டு. சில நாட்கள் கழித்து நான் எழுதினதை நானே வாசிக்கும் போது, நான் சமைத்த உப்புமாவை நானே சாப்பிட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய அனுபவமே நினைவுக்கு வரும். மற்றவர்கள் எழுதின நேர்த்தியான மொழிக் கட்டுரைகளை வாசிக்கும் போது கொஞ்சமாவது என்னைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்று தோன்றும். ஆனால் எழுத உட்காரும் போது எல்லாமே நினைவிலிருந்து கழன்று எண்ணக் குதிரை செக்குமாட்டுப் பாதையில் செல்லும்.

    என்னைக் குறித்து நானே இவ்வாறு ரகசியமாகப் புலம்பிக் கொண்டிருக்க, நீங்கள் செறிவான எழுத்து என்று என் சுட்டியைக் குறித்திருந்த போது அதிர்ச்சி கலந்த ஆனந்தமாக இருந்தது. (ஆனால் இணையத்தில் என்கிற வார்த்தையின் மீது மாத்திரம்தான் என்னுடைய வலைப்பக்கத்தின் இணைப்பு தரப்பட்டிருந்தது. செறிவான மற்றும் எழுத்து ஆகியவைகளில் நண்பர்கள் சொக்கன் மற்றும் தேசிகனின் இணைப்பு தரப்பட்டிருந்ததில் ஏதும் நுண்ணரசியலோ பகடியோ மறைந்திருக்காது என்று நம்புகிறேன்.) :-)))

    எதுவாக இருந்தாலும் உங்களின் பாராட்டிற்கு நன்றி. அதற்குரிய தகுதிக்காக இனியாவது உழைக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டிருக்கிறது. அதற்காகவும் நன்றி.

    அன்புள்ள சுரேஷ் - என் உப்புமாவை விட உங்கள் உப்புமா நன்றாக வெந்திருக்கும் :) பகடியெல்லாம் இல்லீங்கோ!

    மிக்க நன்றி!

    Verify your Comment

    Previewing your Comment

    This is only a preview. Your comment has not yet been posted.

    Working...
    Your comment could not be posted. Error type:
    Your comment has been posted. Post another comment

    The letters and numbers you entered did not match the image. Please try again.

    As a final step before posting your comment, enter the letters and numbers you see in the image below. This prevents automated programs from posting comments.

    Having trouble reading this image? View an alternate.

    Working...

    Post a comment